சிவகாசி: மூதாட்டி மர்ம சாவு. கொலையா? என போலீஸார் விசாரணை...

68பார்த்தது
சிவகாசி அருகே முட்புதருக்குள் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் மீட்பு. சடலத்திற்கு அருகே மது பாட்டில்கள் கிடப்பதால் மது போதையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டரா? என போலீசார் சந்தேகம்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து நாரணாபுரம் செல்லும் சாலையின் அருகே முட்புதற்குள் சுமார் 60 வயதில் மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் கிடப்பதாக, சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து சிவகாசி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் அதே பகுதியில் பழைய இரும்பு மற்றும் காகித பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்த மூதாட்டி என்பது தெரியவந்தது. மேலும் மூதாட்டியின் சடலத்திற்கு அருகில் மது பாட்டில்கள், குளிர்பான பாட்டில், பணம் மற்றும் ஆண்கள் அணியும் காலணி ஆகியவை கிடந்ததால் பணத்திற்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் அருகில் வேற ஏதேனும் தடயங்கள் உள்ளதா என ஆய்வு நடத்தினர். இதையடுத்து மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் கொலையா என்பது தெரிய வரும் என தெரிவித்துள்ள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி