திருக்கோவிலூர் - Tirukoilur

குடும்ப தகராறு; 4 பேர் மீது வாக்குப்பதிவு

குடும்ப தகராறு; 4 பேர் மீது வாக்குப்பதிவு

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் அய்யனார், (45) விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது தம்பி ராஜிவ்காந்தி என்பவருக்கும் நிலம் சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி திடீரென இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜிவ்காந்தி, மகாலிங்கம், பிரியங்கா, புஷ்பா ஆகிய நான்கு பேர் சேர்ந்து அய்யனாரை தாக்கியுள்ளனர். இது குறித்து அய்யனார் திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் ராஜிவ்காந்தி, மகாலிங்கம், பிரியங்கா, புஷ்பா ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து ராஜிவ்காந்தியை, (40); கைது செய்தனர்.

வீடியோஸ்


விழுப்புரம்
Sep 16, 2024, 00:09 IST/விழுப்புரம்
விழுப்புரம்

விழுப்புரத்தில் காா் மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

Sep 16, 2024, 00:09 IST
விழுப்புரம் வழுதரெட்டி, ஆடல் நகரைச் சோ்ந்தவா் கதிா்வேல் மகன் கோபிநாத் (18). இவா், சனிக்கிழமை சென்னை-திருச்சி சாலையில் விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, முன்னால் சென்ற காா் எவ்வித சமிக்ஞையும் செய்யாமல் திரும்பியதாம். அப்போது, கோபிநாத் சென்ற பைக் அந்த காா் மீது மோதியது. இதில், கோபிநாத் பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து, 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில், அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.