திருக்கோவிலூர் - Tirukoilur

வி. ஆர். எஸ். , கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா

வி. ஆர். எஸ். , கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா

விழுப்புரம் அருகே அரசூர் வி. ஆர். எஸ். , பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் இந்த கல்வியாண்டின் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுகம், வகுப்புகள் துவக்க விழா நடந்தது. முதல்வர் அன்பழகன் தலைமை தாங்கினார். நிறுவனர் சரவணன் சிறப்புரையாற்றினார். இவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள இந்த கல்லுாரி, இங்குள்ள மக்களின் கல்வி தேவையை அறிந்து துவங்கப்பட்டது. கல்லுாரி பருவத்தில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கத்தின் முக்கியத்துவம், மேம்படுத்தப்பட்ட கல்வியோடு சேர்த்து ஒழுக்கமான மாணவர்களாக வளர வேண்டுமென இந்த கல்லுாரியில் முழு முயற்சி எடுப்பதாக கூறினார். மேலும், நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி மாணவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ் வழியில் பயின்று, பொறியியல் கல்லுாரியில் பயின்ற மாணவர்கள் தற்போது உயர்ந்த நிலையில் உள்ளதாக கூறினார். முதலாம் ஆண்டு துறை தலைவர் பெருமாள் நன்றி கூறினார்.

வீடியோஸ்


விழுப்புரம்
பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்
Sep 05, 2024, 06:09 IST/விழுப்புரம்
விழுப்புரம்

பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

Sep 05, 2024, 06:09 IST
விழுப்புரத்தில் இந்தாண்டுக்கான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள், வண்ணமயமாக உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராகியுள்ளது. கடந்தாண்டைக் காட்டிலும் விற்பனை குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். தமிழகத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்வதோடு, பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு கைவினைஞர் கிராமம் என அழைக்கப்படுகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர், பிரம்மாண்ட விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஆண்டு முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, வண்ணம் பூசி, தற்போது விற்பனைக்கும் வண்ணமயமாக தயார்படுத்தி வைத்துள்ளனர்.