"தட்டுப்பாடின்றி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்" - அமைச்சர் உறுதி

83பார்த்தது
"தட்டுப்பாடின்றி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்" - அமைச்சர் உறுதி
ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வது குறித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, “அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான நேற்று (அக்.15) வரை 9,461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. 2,04,08,000 பாமாயில் பாக்கெட்கள் ஒதுக்கீட்டில் 97,83,000 பாக்கெட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன. மீதம் உள்ளவை விரைவாக வழங்கப்படும். கட்டாயம் தீபாவளிக்குள் எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டுவிடும்” என உறுதியளித்துள்ளார்.