கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 பேர் பலி

53பார்த்தது
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 5 பேர் பலி
குஜராத்தில் உள்ள அக்ரோடெக் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மூச்சுத்திணறி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொட்டியை சுத்தம் செய்யும் போது ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் அவரை காப்பாற்ற மேலும் இருவர் கீழே இறங்கினர். பின்னர் அவர்களும் மயங்கி விழுந்தனர். சிறிது நேரத்தில் மேலும் இருவர் தொட்டிக்குள் இறங்கினர். இதனால், தொடர்ந்து ஐந்து பேர் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி