
திண்டிவனம் அருகே குட்கா விற்ற வாலிபருக்கு குண்டாஸ்
திண்டிவனம் அடுத்த தீவனுாரை சேர்ந்தவர் பழனி மகன் மணிகண்டன், 35; இவர் கடந்த மார்ச் 12ம் தேதி தனது வட்டிக் கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததை தொடர்ந்து, ரோஷணை போலீசார், மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், நேற்று மணிகண்டனை ரோஷனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை, கடலுார் மத்திய சிறையில் வழங்கினர்.