
திண்டிவனத்தில் நகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
மதுரை ஐகோர்ட், வரும் 21ம் தேதிக்குள், தமிழகம் முழுவதும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், நகராட்சி, உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் நகராட்சி பகுதியிலுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி கமிஷனர் குமரன் தலைமையில் நடந்தது. நகரமைப்பு அலுவலர் திலகவதி மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒரு வாரத்திற்குள் நகராட்சி பகுதியிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என, ஆணையர் அறிவுறுத்தப்பட்டது.