திண்டிவனம் - Tindivanam

திண்டிவனத்தில் பீர்பாட்டிலால் குத்தி கொத்தனார் கொலை.

திண்டிவனத்தில் பீர்பாட்டிலால் குத்தி கொத்தனார் கொலை.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் சேகர் மகன் குமரேசன் கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி மணிகண்டன் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் குமரேசன், மணிகண்டன் மற்றும் இவர்களது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த பாலாஜி, மணி அஜித் என்கிற அய்யப்பன், தினேஷ் ஆகிய 6 பேரும் நேற்று அவரப்பாக்கம் ஏரியில் மீன்பிடித்து அதனை சமைத்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் இரவு அதே பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனார். அப்போது அவர்களுக்குள் தகராறு நடைபெற்று மணிகண்டன் குமரேசனை பீர் பாட்டிலால் குத்தினார் இதில் ரத்தம் பீறிட்டு வெளியேறிய நிலையில் குமரேசன் நிலைக்குலைந்து கீழே சரிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், குமரேசனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவலின் பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் ரோசணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా