
திருச்சியில் கத்தியை காட்டி பணம் திருடியவர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் நியூ சக்திவேல் பிள்ளை காலனி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் இவர் பாலக்கரை காஜா பேட்டை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அங்கு வந்த வாலிபர் ஒருவர் சாப்பிடுவதற்கு உணவு கடன் கேட்டுள்ளார். சுந்தர்ராஜ் தர மறுத்துள்ளார். தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி கல்லாப்பெட்டியில் வைத்திருந்த 1300 ரூபாய் பணத்தை திருடி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து காஜா பேட்டை செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த பிலாலுதீன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து கத்தி மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.