புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் இவர் தற்போது மணச்சநல்லூர் பகுதியில் தங்கி இருந்து கொத்தனார் வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த நேற்று மணச்சநல்லூர் பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சக ஊழியர்கள் அவரை மணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணச்சநல்லூர் போலீசார் ராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.