கோவில்பட்டி - Kovilpatti

தூத்துக்குடி: செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் விழாவினை முன்னிட்டு சுவாமி அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் முக்கிய சிகரநிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மேளதாளம் முழங்க இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.  இதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதன் பின்னர் மேளதாளம் முழங்க பக்தர்களின் கரகோஷங்களிடையே திருத்தேரோட்டம் தொடங்கியது. திருத்தேரோட்டத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், இந்து அறநிலையத்துறை ஆணையாளர் ஸ்ரீதர், இணை ஆணையாளர் அன்புமணி, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜூ ஆகியோர் திருத்தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా