மது போதையில் சாலையில் நடுவில் படுத்து தூங்கிய மது பிரியர்

62பார்த்தது
கோவில்பட்டி அருகே மது போதையில் சாலையில் நடுவில் படுத்து தூங்கிய மது பிரியர் வாகன ஓட்டிகள் அவதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னக் கருப்பன் மகன் வீரையன் என்பவர் கோவில்பட்டியில் அரசு புறநகர் அரசு பேருந்தில் மது போதையில் தனது ஊரான கொப்பம்பட்டிக்கு வந்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பேருந்து நடத்துனர் அதிக மது போதையில் இருந்த வீரையனை கரிசல்குளம் கிராமத்தில் இறக்கிச் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதிகமாக மது குடித்து இருந்ததால் வீட்டிற்கு செல்ல முடியாமல் விரையன் மது போதையில் நடு ரோட்டில் படுத்து கொண்டு தனது செல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார் ஓட்டுநர்கள் அவரை மீட்டு பேருந்து நிலையத்தில் படுக்க வைத்துள்ளனர்.

மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர்கள் மது போதையில் இருக்கக்கூடிய நபரை அவரது கிராமத்தில் இறக்கிவிட்டு சென்று இருக்க வேண்டும் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து சென்று இருக்க வேண்டும் அதிக போதையில் இருந்த நபரை இரவில் சாலையில் இறக்கி விட்டு சென்றதால் மது போதையில் சாலையில் படுத்துக்கொண்டு இருப்பவரை அதி வேகமாக செல்லக்கூடிய வாகனத்தில் அவரது உயிர் பலியாகி இருக்கும்
இதுபோன்ற சம்பவங்க நடைபெறாமல் இருக்கும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி