![சந்திரசேகரபுரம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் சந்திரசேகரபுரம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்](https://media.getlokalapp.com/cache/a1/47/a14785084c0797ccdf12ce90d44575fc.webp)
சந்திரசேகரபுரம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சந்திரபுரம் கிராமத்தில் நடைபெற்றது. சந்திரசேகரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர். ஆலங்குடி வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையில் சிறப்பு நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் தாய் சேய் நலன், குழந்தைகள்நலன், கண் காது மூக்கு தொண்டை காண சிகிச்சை, ஆய்வக பரிசோதனைகள் இயன்முறை மருத்துவம், என பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வலங்கைமான் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமால் பயனடைந்தனர்.