

மன்னையில் காளியம்மன் கோவில் தெருவிளக்கு பூஜை
மன்னார்குடி வானகார தெருவில் உள்ள காளியம்மன் கோவில் 181 வது தீமிதி திருவிழாவையொட்டி 32 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. 1008 திருவிளக்கு பூஜையில் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று திருவிளக்கை அம்மனாக பாவித்து குங்குமம், பூக்கள் கொண்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.