

புனித சூசையப்பர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
மன்னார்குடி தேவாலயத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓசன்னா கீர்த்தனைகளை பாடியவாறு பேரணியாக சென்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்படுவதையொட்டி, பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ மக்கள் ஊர்வலமாக சென்று, தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். இயேசு பிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய ஞாயிறு தனது பாடுகளை மக்களுக்கு உணர்த்த கழுதை மேல் அமர்ந்து ராஜா போன்று ஜெருசலேம் நகர் நோக்கி சென்றதாக நம்பப்படுகிறது. குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி அவர் பவனியாக சென்றதை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர். இதனை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை ஞாயிறு என்று குருத் தோலையை ஏந்தி பவனியாக சென்று பின்னர் சிறப்பு திருப்பலியில் பங்கேற்கின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. தேவாலயங்களில் நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓசன்னா கீர்த்தனைகளை பாடியவாறு நகரின் பல்வேறு பகுதிகளில் பேரணியாக சென்றனர்.