நன்னிலம் - Nannilam

சந்திரசேகரபுரம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

சந்திரசேகரபுரம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சந்திரபுரம் கிராமத்தில் நடைபெற்றது. சந்திரசேகரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர். ஆலங்குடி வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையில் சிறப்பு நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் தாய் சேய் நலன், குழந்தைகள்நலன், கண் காது மூக்கு தொண்டை காண சிகிச்சை, ஆய்வக பரிசோதனைகள் இயன்முறை மருத்துவம், என பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வலங்கைமான் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமால் பயனடைந்தனர்.

வீடியோஸ்


திருவாரூர்
மாணவர் மாணவர் பெருமன்றத்தின் உறுப்பினர் சேர்க்கை
Jul 23, 2024, 04:07 IST/திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி

மாணவர் மாணவர் பெருமன்றத்தின் உறுப்பினர் சேர்க்கை

Jul 23, 2024, 04:07 IST
திருத்துறைப்பூண்டி தண்டலச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உறுப்பினர் பதிவு இயக்கம் மாவட்ட குழு உறுப்பினர் ஞானவேல் தலைமையில் நடைபெற்றது. மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கிய நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது மாவட்ட தலைவர் ஜே பி வீரபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் புதிய அடையாள அட்டை இணை வழங்கியும் புதிய உறுப்பினராக சங்கத்தில் இணைப்பு நிகழ்வு. இந்த நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் அடையாள அட்டையை வழங்கியும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கல்லூரி தலைவர் பொறுப்பாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.