வலங்கைமானில் பாடைகட்டி மாரியம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு ஊர்வலம்

76பார்த்தது
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் அருள் பாலித்து வரும் பாடைகட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு வீதி உலா நேற்று இரவு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். வலங்கைமானில் அருள் பாலித்து வரும் பாடைகட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில். கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரசித்தி பெற்ற பாடைகாவடி திருவிழா நடந்து முடிந்த நிலையில், நேற்று இரவு திருவிழாவின் இரண்டாம் முக்கிய நிகழ்வாக, புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் பல்வேறு வகையான மலர்களால் பல்லக்கு அலங்கரிக்கப்பட்டு அம்மனை எழுந்தருளி செய்து வலங்கைமான் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பாடைகட்டி திருவிழா போன்றே, இப்புஷ்ப பல்லக்கு திருவிழாவிற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி