திருவாரூர் மாவட்டம் வடுவூரில் உள்ள வைணவத்தலமான கோதண்ட ராமர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது 5 வது நாளான நேற்று இரவு கருட வாகனத்தில் கோதண்ட ராமர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.