மத்திய அரசின் PM-கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 19ஆவது தவணையாக ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று (பிப்.,24) விடுவிக்கிறார். பீகார் மாநிலம் பாகல்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான ரூ.2 ஆயிரம் உதவித்தொகை விடுவிக்கிறார். நாடு முழுவதும் சுமார் 9.8 கோடி விவசாயிகள் பயன்பெறவுள்ளனர். இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க மத்திய அரசின் இந்த உதவித்தொகை பயனுள்ளதாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.