
நடிகை ஜனனிக்கு திருமண நிச்சயதார்த்தம்
பாலா இயக்கத்தில் கடந்த 2011-ல் வெளியான 'அவன் இவன்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஜனனி. இப்படத்தை தொடர்ந்து ’தெகிடி’, 'பலூன்’, ‘அதே கண்கள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை ஜனனிக்கும் விமானி சாய் ரோஷன் ஷ்யாம் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.