கேரளா: தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்புவதற்காக வந்த இரு சக்கர வாகன ஓட்டி, தனது வாகனத்தில் பட்டாசுகள் நிரம்பிய பையை மாட்டியிருந்தார். எதிர்பாராத விதமாக, பெட்ரோல் நிரப்புவதற்கு முன்பு பட்டாசுகள் வெடித்துச் சிதறி, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், வாகன ஓட்டி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.