விழுப்புரம்: கோலியனூர் அருகேயுள்ள திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த 2023ல் பட்டியலின மக்கள் வழிபட வேறு சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கோயிலுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் பட்டியலின மக்கள் தரிசனம் செய்ய ஒருதரப்பினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களை சிலர் திட்டியதாக புகார் எழுந்துள்ளது. அங்கு 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.