
மேலப்பாளையம்: மாவட்ட செயற்குழு கூட்டம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கனி தலைமையில் மேலப்பாளையத்தில் இன்று (ஏப்ரல் 17) நடைபெற்றது. இதில் மேலப்பாளையத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.