விராலிமலை |

ஐந்தாயிரம் பேர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நிகழ்வு!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே, மெய்வழிச்சாலையில் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களை வழிபட்டு, மெய்வழி தலையுக ஆண்டு 124, புரட்டாசி மாதம் பிச்சை ஆண்டவர் திருவுலாக் காட்சித் திருவிழா (தெய்வம் அவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி படைக்கும் திருவிழா) மிகச் சிறப்பாக மெய்வழிச்சபையின் சபைக்கரசர் மெய்வழி சாலை வர்க்கவான் அவர்கள் மெய்வழி மக்கள் படைத்த காய்கறிகளை பார்வையிட்டு பஞ்சாட்சர அமுது வழங்கினார். மேலும் தெய்வம் அவர்களுக்கு படைத்த காய்கறிகளை பொது அமுதமாக அனைவரும் கூடி சமைத்து, மாலை 5000 க்கும் மேற்பட்ட அனைத்து மக்களுக்கு அமுது பரிமாறப்பெற்று, மெய்வழிச்சபை நிர்வாகஸ்தர்களின் ஒருங்கிணைப்புடன் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து இவ்விழாவில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


தமிழ் நாடு