குன்னூர் - Coonoor

நீலகிரி
Jul 07, 2024, 09:07 IST/சிங்காநல்லூர்
சிங்காநல்லூர்

இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில்; 2 பேர் கைது

Jul 07, 2024, 09:07 IST
கோவை ராமநாதபுரத்தில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். கோவை, புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் 54 வயது ஆட்டோ டிரைவர். இவர் சுங்கம் பகுதியில் நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், எங்களிடம் அழகான இளம்பெண்கள் உள்ளனர். நீங்கள் பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்கலாம். போலீஸ் தொந்தரவு ஏதும் கிடையாது என தெரிவித்தனர். இது குறித்து உடனே அந்த ஆட்டோ டிரைவர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விபசார புரோக்கர்களான போத்தனூரை சேர்ந்த செபஸ்டியன்ராஜ், ஒண்டிப்புதூர் காமராஜபுரத்தைச் சேர்ந்த பாபு ஆகிய 2 பேரை கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 26 வயதுடைய 2 இளம்பெண்களை ராமநாதபுரம் போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.