
நாமக்கல்: ஜோதிடர்களுக்கு தனி வாரியம் சிறப்பு மாநாட்டில் வலியுறுத்தல்"
பள்ளிப்பாளையம்: ஜோதிடர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என, பள்ளிப்பாளையத்தில் நடந்த ஜோதிடர் சிறப்பு மாநாட்டில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில உலக உண்மை ஜோதிடர்கள் சங்க சிறப்பு மாநாடு, பள்ளிப்பாளையம் அருகே, பெரியகாடு சாலைப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், அகில உலக உண்மை ஜோதிடர் சங்க நிறுவனர் மகரிஷி மந்தராச்சலம் தலைமையில் நடந்தது. மாநாட்டில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. இதில் பல்வேறு தலைப்புகளில் ஜோதிடர்கள் பேசினர். தொடர்ந்து, கல்லூரிகளில், ஜோதிடத்தை பாடமாக வைக்க வேண்டும். ஜோதிட ரீதியாக தவறுகள் செய்தால், போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஜோதிடர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.