நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பொன்குறிச்சியில் அமைந்துள்ள அன்னபூரணி அம்மாள் சமேத இராஜராஜேஸ்வர் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
இதில் நந்திக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.