உசிலம்பட்டி - Usilampatti

பெண்களுக்கான குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்.

உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு போலிசார் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் நடைபெற்றது. மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சமூகத்தில் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று எடுத்துரைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా