உசிலம்பட்டி - Usilampatti

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்துக்குட்பட்ட வி. பி. மணி நகரை சேர்ந்த சந்திர புஷ்பம் (வயது 48) என்பவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் சந்திர புஷ்பம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு விருதுநகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டின் பீரோ வில் இருந்த 10 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ. 80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி ஓடி விட்டனர். மறுநாள் காலையில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அடைந்து சந்திரபுஷ்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது நகை-பணம் திருடு போய் இருப்பது தெரிய வந்தது. திருடு போனவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சம் என தெரிகிறது. இதுகுறித்து அவர் கள்ளிக்குடி போலீசில் இன்று புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా