உசிலம்பட்டி - Usilampatti

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் கிராமத்தில் தோட்டத்தில் வேலை பார்த்தபோது விவசாயி நேற்று(செப்.10) கிணற்றில் தவறி விழுந்து பலியானார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்லப்பாண்டி (42) என்பவர் தோட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும் போது மோட்டார் திடீரென்று பழுதாகி நின்றுவிட்டது. இதனால் கிணற்றில் இறங்கி மோட்டாரை பழுது பார்க்கும் போது நிலை தடுமாறி கிணற்றில் உள்ளே விழுந்தார். கிணற்றில் தவறி விழுந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை மீட்டு உத்தப்பநாயக்கனூர் போலீசார் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా