மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பன்னியான், முதலைக்குளம், கொடிக்குளம், கோவிலாங்குளம் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப். 23) முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார்: சிவகாசியில் வெடிவிபத்து நடந்தது துயர சம்பவம். தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உயிரிழப்புகளை தவிர்க்க முடியாது என்று தினந்தோறும் செய்திகளிலேயே பார்க்கிறோம். ஆனால், உயிரிழப்பு இல்லாமல் பட்டாசு தயாரிக்கும் காலம் வர வேண்டும். அதற்கு இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வால் சொல்ல முடியாத துயரத்தில் மக்கள் இருக்கிறார்கள். மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்பே போராட்டம் நடத்தினார்கள், ஆட்சிக்கு வந்த பின் மூன்று முறை உயர்த்தி உள்ளனர். உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்ற திரைப்படக் கதையாகத்தான் இருக்கிறது. 70% வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன், 90% நிறைவேற்றி விட்டேன் என சொல்கிறார், எதை நிறைவேற்றினார்கள். சசிகலா உசிலம்பட்டி வருகை குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவி சென்றார்.