ஈரோடு மேற்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்
ஈத்கா மண்டபத்தில் தமுமுகவின் 30 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் கோபி அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மனிதநேய இரத்ததான முகாம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார்.
தமுமுக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர்
ஜான் பாஷா வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் குத்புதின்
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்
சலீம் ராஜா
மாவட்ட பொருளாளர்
ஆடிட்டர் அன்வர் புல்லட் மயில்வாகனன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
டி என் பாளையம்
சத்தியமங்கலம் கவுந்தப்பாடி
பவானி கோபி செட்டிபாளையம்
ஆகிய ஊர்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்
இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது முடிவில் கோபிசெட்டிபாளையம் பொறுப்பு நகரச் செயலாளர்
முகமது ரபீக்
நன்றி உரையாற்றினார்.