கோபி அருகே போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

52பார்த்தது
கோபி அருகே போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது
கோபி அருகே போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தெப்பக்குளம் பகுதியில் ரகசியமாக போதை மாத்திரை விற்பனை செய்வதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் அவர்கள் கேரபி புதுச்சாமிகோவில் வீதியைச் சேர்ந்த சூர்யாசாமி (வயது 21), கலிங்கியம் அருகே உள்ள நாகர்பாளையம் நஞ்சப்பா நகரைச் சேர்ந்த மோனீஸ் (21), புதுப்பாளையம் சிவசண்முகம் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (24) என்பதும், விற்பனைக்காக போதை மாத்திரைகள், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 20 போதை மாத்திரைகள், ஒரு சிரஞ்சி 30 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி