ஆத்தூர் - Athoor

பள்ளிவாசல் அருகே திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் அருகே திமுக சார்பில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ ஐ. பி. செந்தில்குமார் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், சுட்டெரிக்கும் வெயிலில் மக்களின் தாகம் தீர்க்க நீர்-மோர் பந்தல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ. பி. செந்தில்குமார் திறந்துவைத்தார். பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் பழ வகைகள் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது: கடுமையான வெயிலால் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நீர் மோர் பந்தல் அமைத்து பழச்சாறு, நீர்-மோர் வழங்க திமுக தலைவரும், முதல்வருமான மு. க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது உத்தரவின் அடிப்படையில் இந்த நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. மாநகர் மாவட்ட திமுக சார்பில், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் நீர்-மோர் திறக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு சிறப்பாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా