சிறு சிறு ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புளியம்பட்டி, நத்தமேடு ஆகிய பகுதிகளில் உள்ள நேற்று பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் இருந்த சிறு சிறு ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செம்மண் நிறத்தில் வெள்ளநீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது, கடந்த சில நாட்களாக மழை இன்றி நீர் நிலைகள் வறண்டு இருந்த நிலையில் இந்த திடீர் மழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.