தர்மபுரி: எஸ்பி தலைமையில் காவல்துறை குறைத்தீர் முகாம்

74பார்த்தது
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. சோ. மகேஸ்வரன் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நேற்று பிப்ரவரி 04 நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) N. பாலசுப்பிரமணியன் அவர்கள் மற்றும் தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) K. ஸ்ரீதரண் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இப்பெட்டிஷன் மேளாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களால் வழங்கப்பட்ட 67 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 67 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று புதிதாக 29 மனுக்கள் பெறப்பட்டது.

தொடர்புடைய செய்தி