பாப்பிரெட்டிபட்டி - Pappireddipatti

முன்னாள் அமைச்சர் தலைமையில் நூல் வெளியீட்டு விழா

முன்னாள் அமைச்சர் தலைமையில் நூல் வெளியீட்டு விழா

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாமியாபுரம் கூட்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை மோளையனூரை சார்ந்த கவிஞர் உதயசூரியன் எழுதிய 'சொன்ன நம்ப மாட்டீங்க' எனும் நூல் வெளியீட்டு விழா முல்லையரசு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை தங்கதுரை வரவேற்று பேசினார். மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் புத்தகத்தை வெளியிட பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தர்மபுரி தொகுதி எம்பி செந்தில் அதனைப் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தமிழ் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


தர்மபுரி