பாப்பிரெட்டிபட்டி - Pappireddipatti

தர்மபுரி: கிணற்றில் தவறி விழுந்த 80 வயது மூதாட்டி உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்குச் சேர்ந்த நார்த்தம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மனைவி சரஸ்வதி 80 வயது மூதாட்டி இவர் நேற்று முன்தினம் (பிப்.5) வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் திரும்பவில்லை. அவரைக் குடும்பத்தினர் தேடிய நிலையில், இன்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது.  தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை காவலர்கள், அவரது உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதியமான்கோட்டைக் காவலர்கள் வழக்குப் பதிந்து செய்த விசாரணையில் சரஸ்வதி மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது

வீடியோஸ்


தர்மபுரி
Feb 07, 2025, 11:02 IST/

கார் விபத்து - போலீசாருடன் மதுபோதையில் பெண் வாக்குவாதம்

Feb 07, 2025, 11:02 IST
சத்தீஸ்கர்: ராய்ப்பூரில் ரஷ்ய பெண் ஒருவர் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் ஸ்கூட்டரில் சென்ற 3 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, அங்கு சென்ற போலீசாரிடம், விபத்து ஏற்படுத்திய பெண், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், காரில் 'இந்திய அரசு' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்தியவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி: @HateDetectors