தர்மபுரி: வாரச்சந்தையில் கால்நடைகள் 65 லட்சத்திற்கு விற்பனை

66பார்த்தது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஆடுகள் மற்றும் மாடுகள் கால்நடைகள் விற்பனைக்காக வார சந்தை நடைபெறுவது வழக்கம் இன்று காலை கூடிய வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை விற்க மற்றும் வாங்குவதற்காக வந்திருந்தனர் இன்று சிறிய அளவிலான ஆடுகள் 2500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 20000 ரூபாய் வரையில் என 35 லட்சத்திற்கு விற்பனையானது மேலும் மாடுகள் 8, 000 முதல் 45, 000 ரூபாய் வரை என 30 லட்சத்திற்கு விற்பனையானது. ஒட்டுமொத்தமாக 65 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி