பெரம்பூர் - Perambur

சொத்து தகராறு: பெண் தற்கொலை

சொத்து தகராறு: பெண் தற்கொலை

கொளத்தூர் ஜி. கே. எம் காலனி 34வது தெருவை சேர்ந்தவர் சங்கீதா (40), இவருக்கு 18 வருடங்களுக்கு முன்பு ஏழுமலை என்பவருடன் திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஏழுமலை கார்பென்டர் வேலை செய்து வருகிறார். சங்கீதா இருக்கும் வீடு அவரது பூர்வீக சொந்த வீடு. அந்த வீட்டின் அருகிலேயே தனித்தனியாக வீடு கட்டி அவரது அப்பா ராஜேந்திரன், அம்மா ராஜேஸ்வரி மற்றும் தம்பி சதீஷ், தங்கை தீபிகா ஆகியோரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சங்கீதா கூடுதலாக சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி அவரது தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரும் தருவதாக கூறி வந்துள்ளார். நேற்று முன்தினம் (செப் 19) சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அன்று மாலை 5 மணி அளவில் பெட்ரூமில் மின்விசிறியில் சேலையால் சங்கீதா தூக்கு போட்டுக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் சங்கீதாவை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் சங்கீதாவை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


சென்னை