திருச்சிராப்பள்ளி - Tiruchirappalli

மது போதையில் தகராறு: மகனை அரிவாளால் வெட்டிய தந்தை

திருச்சி மாவட்டம் மணப்பாறை கரிக்கான்குளத்தை சேர்ந்த சலவை தொழிலாளி சதீஸ்குமார்(31). இவர், வெள்ளிக்கிழமை மாலை மதுபோதையில் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தந்தை முருகேசனை சதீஸ்குமார் அரிவாளால் வெட்ட முயன்றார். உடனே முருகேசன் அரிவாளை பறித்து மகனை வெட்டினார். இதில் சதீஸ்குமார் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸார் சதீஸ்குமாரை மீட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


திருச்சிராப்பள்ளி
திருச்சியில் மாணவர்களுக்கான நல்லொழுக்க முகாம்
May 18, 2024, 13:05 IST/ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

திருச்சியில் மாணவர்களுக்கான நல்லொழுக்க முகாம்

May 18, 2024, 13:05 IST
சமூக நீதி மாணவர் இயக்கம் திருச்சி மண்டலம் சார்பாக திருச்சி கிழக்கு மாவட்டத்தில் உள்ள மஸ்ஜித் அர் ரையான் பள்ளிவாசலில் ஹய்ய அலல் ஃப்லாஹ் மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம் SMI மண்டல தலைவர் திருச்சி அப்பிஸ் தலைமையில் முகாம் நடைபெற்று முடிவடைந்தது. இந்நிகழ்வில் மாநில பொருளாளர் பொறியாளர் N. ஷபியுல்லா கான் மற்றும் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஜெய்னுலாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள், கே மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் M. A. முகமது ராஜா, மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அஹமத் MC, IPP மாநில துணை செயலாளர் திருச்சி ரபீக் மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட துணை, அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.