மணப்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் இருப்பதாக கடந்த 14ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர் தங்கபாண்டியன் அளித்த தகவலின் பேரில் அவரை மீட்ட போலீசார் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.