திருச்சிராப்பள்ளி - Tiruchirappalli

மது போதையில் தகராறு: மகனை அரிவாளால் வெட்டிய தந்தை

திருச்சி மாவட்டம் மணப்பாறை கரிக்கான்குளத்தை சேர்ந்த சலவை தொழிலாளி சதீஸ்குமார்(31). இவர், வெள்ளிக்கிழமை மாலை மதுபோதையில் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தந்தை முருகேசனை சதீஸ்குமார் அரிவாளால் வெட்ட முயன்றார். உடனே முருகேசன் அரிவாளை பறித்து மகனை வெட்டினார். இதில் சதீஸ்குமார் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸார் சதீஸ்குமாரை மீட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.