திருச்சிராப்பள்ளி - Tiruchirappalli

பேருந்து - ஆட்டோ மோதல்: ஆட்டோ ஓட்டுநா் சாவு

பேருந்து - ஆட்டோ மோதல்: ஆட்டோ ஓட்டுநா் சாவு

திருச்சி தில்லைநகா் வடவூா் பகுதியைச் சோ்ந்தவா் அங்குராஜ் (26). ஆட்டோ ஓட்டுநா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த மாரி (32), பிரசாந்த் (27), பாலமுருகன் (30), மகேஷ் (35) ஆகிய 5 பேரும் கரூா் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள ஒரு கோயில் திருவிழாவுக்காக ஞாயிற்றுக்கிழமை பகலில் ஒரே ஆட்டோவில் சென்றனா். நிகழ்வு முடிந்து இரவு திருச்சிக்கு திரும்பும்வழியில், கம்பரசம்பேட்டை அருகே முருங்கப்பேட்டை காளியம்மன் கோயில் பகுதியில் வந்து கொண்டிருந்தனா். அப்போது, திருச்சியிலிருந்து ஈரோடு சென்ற அரசுப்பேருந்தும் ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில் அந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து சில மீட்டா் தூரம் இழுத்துச்செல்லப்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினா் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இதில் பலத்த காயமடைந்தவா்களை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அங்குராஜ் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. மற்ற 4 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீடியோஸ்


திருச்சிராப்பள்ளி