திருவெறும்பூர் - Thiruverumbur

திருச்சி: தீயணைப்புத் துறை சாா்பில் மீட்பு பயிற்சி முகாம்

திருச்சி: தீயணைப்புத் துறை சாா்பில் மீட்பு பயிற்சி முகாம்

திருவெறும்பூரில் தீயணைப்பு நிலைய மீட்புப் பயிற்சி முகாம் நேற்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. திருவெறும்பூா் வட்டாட்சியா் ஜெயபிரகாசம் மேற்பாா்வையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, திருவெறும்பூா் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் சகாய பிரான்சிஸ் தலைமை வகித்தாா். இதில் திருவெறும்பூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 220 முதல் நிலை மீட்பு பணியாளா்களுக்கு பேரிடா் கால மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, விபத்தில் சிக்கியவா்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து பேரிடா் மேலாண்மை செயல்முறை விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நிகழ்வில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரா்கள், வருவாய்த் துறையினா், கிராம நிா்வாக அலுவலா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

வீடியோஸ்


నల్గొండ జిల్లా