ஜெயங்கொண்டசோழபுரம் - Jayankondam

அரியலூரில் காங்கிரஸார் உறுதிமொழி ஏற்பு

அரியலூரில் காங்கிரஸார் உறுதிமொழி ஏற்பு

அரியலூர் காமராஜர் சிலை முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து ராஜீவ் காந்தியின் நினைவு நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 21 ஆம் தேதி தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அமைதி, மனிதநேயம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தினை பொதுமக்களிடையே எடுத்துக் கூறும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், நகரத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட மாவட்ட, வட்டார, நகர, நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


அரியலூர்
May 21, 2024, 10:05 IST/அரியலூர்
அரியலூர்

அரியலூரில் செத்து மிதக்கும் மீன்கள்: மக்கள் அவதி

May 21, 2024, 10:05 IST
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அருள்மொழி கிராமத்தில் அய்யனார்குளம் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் அக்குளத்தில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான மீன்கள் திடீரென மர்மமான முறையில் செத்து மிதந்து கரை ஒதுங்கி வருவதால், அப்பகுதி மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இது தொடர்புடைய அதிகாரிகள் உடனடியாக குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்திவிட்டு சுகாதாரத்தை சீர்படுத்த வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.