அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதிகளில் உள்ள சாலை ஓர வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும் வரி செலுத்தாமலும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன் ஆய்வு செய்து கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார், மேலும் பல ஆண்டுகளாக வரி செலுத்தாக கடை உரிமையாளர்களை எச்சரிக்கை விடுத்தும் பல்வேறு உரிமையாளர்களிடம் இருந்து நிதி வசூல் செய்தனர்.