தமிழக சட்டப்பேரவையில், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எந்த தடையும் இல்லை என்பதால் அதனை நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் உங்களுக்கு என்ன கஷ்டம்?” என அதிமுகவைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ரகுபதி, “மத்திய பாஜக அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க முடியுமே தவிர நாங்கள் எடுக்க முடியாது. பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்களே, நீங்கள் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை?” என்றார்.