டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி தண்ணீர் பிரச்சனை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (ஜுன் 6) முக்கிய தீர்ப்பை வழங்கியது. ஹரியானாவுக்கு உடனடியாக 137 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தண்ணீரானது டெல்லிக்கு திறந்துவிடப்படும்.
இதனால் தண்ணீர் தட்டுப்பாட்டில் வாடும் டெல்லிக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி