கள்ளக்குறிச்சி: உடலை தோண்டி எடுக்க முடிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரியை சேர்ந்தவர் ஜெயமுருகன். இவர் நான்கு நாட்களுக்கு முன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் ஜெயமுருகன் மனைவி போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கள்ளச்சாராயம் குடித்து கணவர் இறந்ததாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஜெயமுருகன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் மற்றும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி