2018-19 நிதியாண்டின் வருமானத்துடன் ஒப்பிடுகையில், 2023-24ல் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 87 சதவீதம் அதிகரித்து ரூ.2.39 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக உலகளாவிய தரகு நிறுவனமான CLSA தெரிவித்துள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ சேவை தொடங்கப்பட்ட பிறகு, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாயில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஏர்டெல்லின் வருவாய் 12 சதவீதம் அதிகரித்து ரூ.88,700 கோடியாகவும், ஜியோவின் வருவாய் 10 சதவீதம் அதிகரித்து ரூ.99,200 கோடியாகவும் இருக்கிறது.