நீட் தேர்வு முறைகேடு: திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

62பார்த்தது
நீட் தேர்வு முறைகேடு: திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என மாணவரணி செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிக பெரிய மோசடிகளை, குளறுபடிகளை களைவதற்கு மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஒன்றிய பாசிச பாஜ அரசை கண்டித்தும் திமுக மாணவர் அணி சார்பில் வருகிற 24-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற இருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you