சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மவர்த்தினி சமேத புண்ணியகோடீசுவரர் கோயில் முக்கிய சிவன் ஸ்தலமாகும். இங்கு மும்மூர்த்திகளில் ஒருவராக இருக்கக்கூடிய திருமால் தரிசனம் மேற்கொண்டுள்ளார். அதேபோன்று புராணங்களில் வரக்கூடிய கஜேந்திரன் எனும் யானையும் இக்கோயிலில் வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள தீர்த்த குளத்தில் நீராடினால், இங்கிருக்கும் இறைவனை வழிபட்டால் புண்ணியம் பல மடங்கு பெருகும். இதனாலேயே இக்கோயிலுக்கு புண்ணியகோடீசம் என்ற பெயரும் வந்தது.